பிறந்த குழந்தைக்கு ஆதாரமாக விளங்குவது தாய்மார்கள் அளிக்கும் தாய்ப்பால் ஆகும். குழந்தை பிறந்த முதல் ஆறு மாதம் வரையாவது, கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். ஏனெனில், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தாய்ப்பாலுக்கு நிகரான வேறு எந்த சத்தும் கிடையாது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது. குறிப்பாக பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாக மார்பக புற்றுநோயில் இருந்து விடுபடலாம்.
தாய்ப்பால் சுரக்க வைக்கும் உணவுப் பொருள்கள்
பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளின் வெளிப்பாடாக தாய்ப்பால் சுரப்பு குறைவாத இருப்பதைக் குறிக்கலாம். இருப்பினும் இந்த சூழலுக்கு மற்ற சில காரணங்களாக தூக்கமின்மை, உணவுப்பழக்கங்கள் போன்றவை இருக்கக் கூடும். இதில் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க எடுத்துக்கொள்ள வேண்டிய சில உணவுப் பொருள்களைக் காணலாம்.
வெந்தயம்
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இது பால் சுரப்பு பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி குடிக்க தாய்ப்பால் அதிகரிக்கும். பாலுக்குப் பதிலாக, சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் குடிப்பதன் மூலமும் தாய்ப்பால் சுரக்கும்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் பிரவுன் ரைஸூம் உதவுகிறது. இது தாய்ப்பால் சுரப்பதற்கான ஹார்மானைத் தூண்டச் செய்கிறது. இந்த பிரவுன் அரிசியுடன் சத்தான காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கூடுதல் பலன்களைப் பெறலாம்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, காலக்கெடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன; இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இணையதளம் வழங்கும் எந்த தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பப்படி மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதில்கள்/கருத்துகள் வடிவில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் ஏதேனும் ஆலோசனை/உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன், தகுதிவாய்ந்த மருத்துவப் பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்